Type to search

Headlines Local News News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

Share

சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தில்  கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது  (29) இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மொஹமட் சாமீர் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

சட்டவிரோத மனிதக் கடத்தல், பாதுகாப்பான புலம்பெயர்வு, தொழிலாளர் இடம்பெயர்வு மற்றும் நியாயமான, நெறிமுறைமிக்க ஆட்சேர்ப்பு செயல்முறைகள் தொடர்பான தெளிவூட்டல்கள், நியூசிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான முறைசாரா குடியேற்ற தொடர்பு அதிகாரி சோனியா டக்ளஸ் அவர்களால் வழங்கப்பட்டன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link