Type to search

Headlines Local News News

வாழைச்சேனையில் வயலுக்கு சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு

Share

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஊத்துச்சேனை வயல் பகுதிக்கு சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் உயிரிழந்த நிலையில் நேற்று (12) செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த 46 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விவசாயி மழை பெய்து வரும் நிலையில் வயலுக்கு சென்றவர் நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிய போது கால்வாயில் சடலமாக கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link