Type to search

Headlines Local News News

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி!

Share

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (9) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். 

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். 

இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்து இடம்பெற்ற உடனேயே, லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். 

அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார், விபத்து இடம்பெற்ற விதம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அத்துடன் தப்பியோடிய லொறியின் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன 

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link