லெபனான் மீதான தாக்குதலில் 182 பேர் பலி!
Share
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதலில் 182 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் நடைமுறையிலிருக்கும் நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்நிலையில் லெபனான் மீதான தாக்குதல்கள் இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்குமென ஈரானின் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் மீது சில நொடிகளில் நூற்றுக்கும் அதிகமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இதேவேளை ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் உள்வாங்கப்படவில்லையென இஸ்ரேலும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளது.


