போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட படகு திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது
Share
போதைப்பொருளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகொன்று, 4 சந்தேக நபர்களுடன் திக்கோவிட்ட துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த படகை கடற்படையினரும் காவல்துறையினரும் இணைந்து முழுமையாக சோதனையிட்ட போதே, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த அளவை துல்லியமாக கணக்கிடுவதற்காக, அவற்றை எடையிடும் பணிகள் துறைமுக வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


