Type to search

Headlines News World News

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

Share

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

பாதிப்புகள் குறித்து மதிப்பிட்டு வரும் அதிகாரிகள், நிலமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் அவசர சேவைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர். 

ஜப்பான் விடுத்துள்ள ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

சுனாமி அலைகள் ஏற்கனவே கடலோரப் பகுதிகளை நெருங்கி வருகின்றன, இவை மீண்டும் மீண்டும் தாக்கக்கூடும். எனவே, மக்கள் தாமதமின்றி வெளியேறி, எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்படும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். 

அலைகள் கணிக்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வரக்கூடும், மேலும் எதிர்பார்க்கப்பட்டதை விட உயரமாகவும் இருக்கலாம். 

கடலோரப் பகுதிகள் மற்றும் நீர் பெருக்கெடுத்து ஓடக்கூடிய ஆற்று முகத்துவாரங்களிலிருந்து மக்கள் விலகியிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link