Type to search

Headlines News Sports

இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

Share

மூன்றாவதும் இறுதியுமான பரபரப்பான இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டி இன்று (15) இடம்பெற்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் துனித் வெல்லாலகே 28 பந்துகளில் 43 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார். 

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 170 என்ற வெற்றியிலக்கை இலங்கை அணி நிர்ணயித்தது. 

அதனடிப்படையில் 170 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

இந்நிலையில் 2 க்கு 1 என்ற அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link