Type to search

Headlines

எதிர்வரும் திங்கட்கிழமை திட்டமிட்ட வகையில் பாடசாலைகள் ஆரம்பம்

Share

மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார்.

மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 25ஆம் திகதி அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளுக்கும் 2021 ஆம் கல்வியாண்டுக்கான முதல் தவணை விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link