Type to search

Headlines

வலம்புரி பத்திரிகை விநியோகஸ் தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Share

வலம்புரிப் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இனந்தெரி யாத கும்பலொன்று வாள்வெட் டுத் தாக்குதல் நடத்திவிட்டு அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றை அபகரித்து தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவம் சுன்னாகம் கந்தரோடை வெளியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் இணுவிலைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தரான பா.மதனகரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வலம்புரிப் பத்திரிகை விநியோகப் பணிக்காக சுன்னாகம் கந்த ரோடை வெளிப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் மதனகரனை வழிமறித்து கண்ட பாட்டில் தாக்குதல் நடத்திவிட்டு அவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலை பேசி என்பவற்றை அபகரித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

குறித்த பணியாளர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவுவண்டி யின் உதவியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வலம்புரி பத்திரிகையின் அலுவலகச் செய்தியாளர் மீது கடந்த மாதம் 21ஆம் திகதி பிறவுண் வீதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதோடு அவரது மோட் டார் சைக்கிளும் அடித்து நொருக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link