Type to search

Headlines

பேருந்திலிருந்து தவறிவிழுந்த 5 மாத குழந்தை காயம்

Share

சாவகச்சேரி – நுணாவில் கிழக்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை பேருந்தில் தாயுடன் பயணம் செய்த ஐந்து மாத வயது நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று வீதியில் தவறிவிழுந்து தலையில் காயமடைந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

துணுக்காய்ப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வந்த தனியார் பேருந்தின் முன் இருக்கையில் இருந்து தாய் ஒருவர் தனது ஐந்து மாதக் குழந்தையுடன் பயணம் செய் துள்ளார்.

இந் நிலையில் சாவகச்சேரி பகுதியை அடைந்ததும் திடீரென வீதிக்கு குறுக்கே வந்த மோடடார் சைக்கிள் ஒன்றைக் காப்பாற்றும் நோக்கில் பேருந்து சாரதி சடுதியாக பேருந்தை நிறுத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது முன் இருக்கையில் கைக் குழந்தையுடன் இருந்த தாயார் நிலை தடு மாறி பேருந்தின் உள்ளே விழுந்துள்ளார். அதன்போது கையில் இருந்த குழந்தை உருண்டு பேருந்தின் வெளியில் விழுந்து தலையில் காயமடைந்துள்ளது.

காயமடைந்த குழந்தை உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் துணுக்காய் அக்கிராயன் கிழக்கு கடதாசிக் குடியிருப்பைச் சேர்ந்த சு.லோஜன் என்ற குழந்தையே தலையில் காயமடைந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link