கொரோனா தொற்று ஆயிரத்து 530 ஆக உயர்வு
Share

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 61 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 15 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களாவார்கள்.
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டு கிரிகம தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் 17 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
எஞ்சிய இருவரும் கடற்படையினர். கொரோனா தொற்றுடன் தற்போது 775 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.