Type to search

Headlines

குளிக்கச் சென்றவர் கிணற்றிலி ருந்து சடலமாக மீட்பு

Share

கிணற்றில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித் துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை மாலை சக் கோட்டை, அல்வாய் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இராயப்பு அன்ரனிதாஸ் (வயது- 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிமையில் வசித்து வந்த மேற்படி குடும்பஸ்தர் அருகில் உள்ள பொது கிணற்றில் குளிக்கச் சென்ற நிலையில் கிணற்றிற்கு அருகாமையில் மரண மடைந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித் துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link