குளவி கொட்டியதில் 3 வயது சிறுமி பலி
Share

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் அதில் சிகிச்சை பலனின்றி 3 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நொச்சிமோட்டையில் உள்ள அவர்களது விவசாயக் காணியில் நேற்று மதியம் 12.30 மணியளவில் குளவிக் கொட்டுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விவசாய காணியினை சுத்தம் செய்வதாக ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வர் காணியில் இருந்த மரம் ஒன்றினை வெட்டிய சமயத்தில் மரத்தினுள் காணப்பட்ட குள விக்கூடு கலைந்து குளவிகள் அவர்கள் நால்வர் மீதும் கொட்டியுள்ளது.
இதில் படுகாய மடைந்த நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.