Type to search

Headlines Local News News

ஜூன் மாத எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோவின் அறிவிப்பு

Share

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜூன் 5 ஆம் திகதி எரிவாயு விலையை திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்குத் தேவையான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இறுதி அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

உலக சந்தையில் நிலவும் விலை நிலவரங்களுக்கு அமையவே இம்முறை எரிவாயு விலையைத் திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

எவ்வாறாயினும், கடந்த மாதம் லிட்ரோ எரிவாயு விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருக்க அந்த நிறுவனம் தீர்மானித்திருந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link