களமெட்டிய கடலில் நீராடச் சென்று காணாமல் போன மாணவர்களின் சடலங்கள் மீட்ப்பு!
Share
ஹங்கம, களமெட்டிய கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர்கள் மூவரின் சடலங்களும் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளன.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் 12, 17 மற்றும் 18 வயதுடைய மூன்று பாடசாலை மாணவர்களே சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்குள்ளான அனைவரும் ஹுங்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


