கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு….
Share
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


